tamilnadu

img

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு திட்ட விளக்க கூட்டம்

நாமக்கல், பிப். 9- தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் சார்பில் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய குழு  உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான திட்ட விளக்க கூட்டம் நாமக்கல்லில் மாவட்ட ஆட்சியர் கா.மெக ராஜ் தலைமையில் சனியன்று நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் பேசும்போது தெரிவித்ததாவது, தமிழ் நாடு ஊரக புத்தாக்கத்திட்டம் உலக வங்கி  நிதியுதவியுடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் தொடங்கப்பட்ட ஒரு தனித்துவம் வாய்ந்த திட்டமாகும். இத்திட்டமானது தமிழகத்தின் 26 மாவட் டங்களில் 120 வட்டாரங்களில் 3,994 கிராம ஊராட்சிகளில் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படவுள்ளது. மாவட்டத்தில் பள்ளிப்பாளையம், புதுச்சத்திரம், மோக னூர் மற்றும் திருச்செங்கோடு ஆகிய நான்கு  ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 87  கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்ப டுத்தப்படவுள்ளது. முதற்கட்டமாக புதுச்சத் திரம் ஊராட்சி ஒன்றியத்தில் செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஊரக தொழில் முனைவோரை உருவாக்குதல், அவர்களுக்கு தேவையான நிதி மற்றும் சேவைகளுக்கு வழிவகுத்தல் மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குதல் ஆகியன இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வெ.சாந்தி, தமிழ் நாடு ஊரக புத்தாக்க திட்ட மாவட்ட செயல்  அலுவலர்கள் கோ.தாமோதரன், ரா.சுரேஷ் குமார், புதுச்சத்திரம் வட்டார வளர்ச்சி  அலுவலர்கள் ஏ.பிரபாகரன், டி.ஏ.சரவ ணன் உட்பட ஒன்றியக்குழு உறுப்பினர் கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆகி யோர் கலந்து கொண்டனர்.